விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்துகொள்வோம்" - காசி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்

நாகர்கோவில் காசி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் பலகட்ட விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கைப்பற்றியுள்ளனர்.

Update: 2020-06-22 02:13 GMT
நாகர்கோவில் காசி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் பலகட்ட விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கைப்பற்றியுள்ளனர். அவர்களை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அந்த பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர். மறந்து போன சம்பவத்தை நினைவு படுத்த வேண்டாம், திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறோம் என கூறிய சில பெண்கள், விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்