செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - கூலி தராததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி
கரூரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்ற கட்டிடத் தொழிலாளி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காண்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.
கரூரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்ற கட்டிடத் தொழிலாளி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காண்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் , தனது சொந்த ஊருக்கு செல்ல இதுநாள் வரை வேலை பார்த்ததற்கான கூலியை காண்ட்ராக்டரிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, மனமுடைந்த மருதுபாண்டி
250 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மருதுபாண்டியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, செல்போன் டவர் மீது ஏறிய தீயணைப்புத் துறையினர் அவரது சம்பள பணத்தை வாங்கி அவரிடம் ஒப்படைத்ததை அடுத்து, மருதுபாண்டி கீழே இறங்கினார்.