"எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏன் தடுக்க முடியவில்லை?" - பிரதமர் மோடிக்கு, கமல் கேள்வி

அதிகமுறை சீனாவிற்கு சென்று வந்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏன் தடுக்க முடியவில்லை என பிரதமர் மோடிக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-06-21 12:30 GMT
அதிகமுறை சீனாவிற்கு சென்று வந்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏன் தடுக்க முடியவில்லை என பிரதமர் மோடிக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு சீன அதிபரை, இந்தியாவுக்கு வரவழைத்து நட்புறவை வளர்க்க பேச்சுவார்த்தை நடத்தியது உதவவில்லையா எனவும் அவர் வினவியுள்ளார். நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமரின் முயற்சி தோல்வியா என்றும் கமல் தெரிவித்துள்ளார். கேள்வி கேட்பவர்களை தேச விரோதியை போல் கட்டமைக்கப்படுவதாகவும் கமல்  கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்