காவல் ஆய்வாளர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி

கொரோனா தொற்றால் மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-06-18 12:53 GMT
கொரோனா தொற்றால்  மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் காவல் நிலையங்கள் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், பால முரளி பணியாற்றிய மாம்பலம் காவல் நிலையம் மற்றும் மெரீனா கடற்கரையில் காவல்துறையினர் மௌனஅஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்