"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலிக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-06-16 09:59 GMT
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். பெட்ரோல், டீசல் விலையேற்றமானது அரசின் பொருளாதார தேவைக்கு சாதகமாக இருந்தாலும், ஊரடங்கு தளர்விற்கு பின்னர் அதிகரிப்பது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன், பொதுமக்கள் மீது பொருளாதார சுமையை உண்டாக்கும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்படால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்