கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? - சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக வரும் செய்தி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-07 03:54 GMT
கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக வரும் செய்தி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும், அதைக் குறைத்து காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாக, செய்திகள் வருவதாக கூறியுள்ளார். இது  உண்மைதானா என்பது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்