சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம் - உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-06 07:48 GMT
கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 33 நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில், தங்கள் அறைகளில் காணொளி  மூலம் வழக்குகளை விசாரித்து வந்தனர். இந்த விசாரணைக்கு வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்று பரவும் அபாயம் இருப்பதாக, நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதை அடுத்து, நீதிமன்ற விசாரணையில் திடீர் மாற்றம் செய்ய உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், நான்கு தனி நீதிபதிகளும், அவசர வழக்குகளை தங்கள் வீடுகளில் இருந்து காணொளி காட்சி மூலம் விசாரிப்பர் என, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்