சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-06-02 02:36 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டம்நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சிறப்பு அதிகாரி, மாநகராட்சி ஆணையர் மற்றும் களப்பணி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்