ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-06-01 07:09 GMT
கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்த போதிலும், பலர் சமூக விலகலை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல், பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்