காஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊரடங்கு தூய்மை காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், கிராம அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இளைஞரணி சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

Update: 2020-05-30 03:27 GMT
காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊரடங்கு  தூய்மை காவலர்கள், நகராட்சி ஊழியர்கள்,  கிராம அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இளைஞரணி சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது. 13 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள் காய்கறி அடங்கிய நிவாரண உதவி பொருட்களை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்