பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம் - ஊரடங்கை பயன்படுத்தி திருடிய மர்ம நபர்கள்

மதுரையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2020-05-20 07:03 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய  பிஎஸ்என்எல் அலுவலகம் மூடபட்டிருந்தது, சில கட்டுப்பாடுகளுடன்  அலுவலகம் தொடங்க ஆரம்பித்த நிலையில்  அலுவலகத்தை திறந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சரக்கு இருப்பு வைக்கப்படும் அறையில் புதிய டவர்கள் அமைப்பதற்காக அமைக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 72 பேட்டரிகளில் 47 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதை அறிந்த பிஎஸ்என்எல் அலுவலகத்தின் மூத்த அதிகாரி செந்தில்குமார் தல்லாகுளம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்