தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் சிறார்கள் : சென்னையில் ஒரே நாளில் 8 சிறார்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை பச்சிளம் குழந்தைகள் உட்பட 150 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

Update: 2020-05-02 03:03 GMT
தமிழகத்தில் இதுவரை பச்சிளம் குழந்தைகள் உட்பட 150 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒருவார காலமாக சென்னையில் மட்டும் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 9 சிறார்கள், ஏப்ரல் 29ஆம் தேதி 8 சிறார்கள், ஏப்ரல் 30ஆம் தேதி 11 சிறார்கள் என கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 12 வயதுக்குட்பட்ட 28 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்,  சென்னையில் 2 மற்றும் இரண்டரை வயது பச்சிளம் குழந்தைகள் உட்பட  8 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலான சிறார்களுக்கு முதன்மை தொற்று பரவியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு நோய் பரவியது எப்படி என்பது தொடர்பாக சுகாதாரத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்