ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு - "சிறிதும் தாமதமின்றி அறிவிக்க வேண்டும்"

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை, சிறிதும் தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2020-04-30 09:45 GMT
ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை, சிறிதும் தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முன்கூட்டியே முடிவெடுத்து அறிவித்தால், மக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்கு தவிர்க்க முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்