ஹாங்காங்கில் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்- உடலை மீட்டு தர கோரி அரசுக்கு கோரிக்கை

ஹாங்காங் நாட்டில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்த ராஜா என்பவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2020-04-25 05:08 GMT
ஹாங்காங் நாட்டில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்த ராஜா என்பவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அனிதா உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததுடன் மேற்கொண்டு செய்வதறியாமல் தவித்து வருகிறார். சீர்காழியை சேர்ந்த அந்த இளைஞர் உடலையும், அவரது மனைவியையும் மீட்டு தர உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்