"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Update: 2020-04-09 14:01 GMT
சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகளை கே.கே.நகரில் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ரேஷன் கடையில், அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்றும், தேவையின்றி கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்