பாம்பன் கடல் பகுதிக்கு வந்து சென்ற தூத்துக்குடி படகுகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா என மீனவர்கள் எதிர்பார்ப்பு
ஊடரங்கு நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ள நிலையில் பாம்பன் கடல் பகுதிக்குள் தூத்துக்குடி படகுகள் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடரங்கு நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ள நிலையில், பாம்பன் கடல் பகுதிக்குள் தூத்துக்குடி படகுகள் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கொச்சின் துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், பாம்பன் திரும்பிய நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.