"சீனர்களை போல இருப்பதால் பிரச்னை - பாதுகாப்பு வேண்டும்" : வடகிழக்கு மாநில மாணவர்கள் சார்பில் மனு அளிப்பு

பார்ப்பதற்கு சீனர்கள் போல் உள்ளதால் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடகிழக்கு மாநில மாணவர்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-20 19:10 GMT
வடகிழக்கு மாநில நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், டெல்லியில் வடகிழக்கு மாநில மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு உதவி தொலைபேசி எண்களை போல, சென்னையிலும் அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள், உணவு விடுதி மற்றும் மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அது தொடர்பாக சென்னையில் தங்கி உள்ள வடகிழக்கு மாநில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரச்னை தீரும் வரை அவர்கள் சென்னையிலேயே தங்குவதற்கு உரிய ஆவணம் செய்ய அரசு முன்வரவேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காவல் ஆணையர் உதவ வேண்டும் என அதில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்