"கொரோனா பரிசோதனை...கட்டணம் இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் அதற்கு கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை என பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால்,அதற்கு கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை என பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தரமான ஆய்வக வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அங்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும் என்றார்.