கொரோனா குறித்து வாட்ஸ் ஆப்பில் பீதி - தவறான தகவல் பரப்பிய மின்சார வாரிய ஊழியர் கைது

ஈரோட்டில் கொரோனா குறித்து வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்திய மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-03-19 05:20 GMT
ஈரோட்டில், கொரோனா குறித்து வாட்ஸ் ஆப்பில், தவறான தகவல்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்திய மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு ஆட்சியர் கதிவரன், பொதுமக்கள் பீதியடையும் வகையும் தவறான தகவலை வெளியிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில், மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் ஊழியர் வெங்கடாசலம், கொரோனா குறித்து, தவறான தகவலை வாட்ஸ் ஆப்பில் பரப்பியுள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்