திண்டுக்கல்லில் ரூ.340 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி - இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்லில் புதிதாக அமையும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2020-03-14 04:19 GMT
மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், 340 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றை திண்டுக்கல்லில் தமிழக அரசு அமைக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக, திண்டுக்கல் அடியனூத்து கிராமத்தில் உள்ள ஒடுக்கம் பகுதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. 

இந்த விழாவில், 25 ஆயிரத்து 613 பயனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியையொட்டி, 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்