மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயம் - அரசு, தொல்லியல் துறை, தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் மார்ச் 27ஆம் தேதிக்குள பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-25 12:54 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் மார்ச் 27ஆம் தேதிக்குள பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 55 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, தேவாலயம் கட்டப்பட்டதாகவும், அதனை அகற்றக்கோரியும் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து, விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்