கேஸ் விலை உயர்வு - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-18 20:47 GMT
ஆட்சியர் அலுவலகம், சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டர்களை ஊர்வலமாக எடுத்து வந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மணலி, சென்னை

இதேபோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மணலியில், காங்கிரஸ் கட்சியினர் மண் அடுப்பில் பாத்திரம் வைத்து சமைப்பது போல், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தாராபுரம் 

திருப்பூர் தாராபுரத்தில், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், சிலிண்டரை பாடையில் தூக்கி வந்து, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்