இறப்பிலும் இணை பிரியாத தம்பதியினர் - ஒரே இரவில் இருவரும் அடுத்தடுத்து மரணம்

திருவண்ணாமலை அருகே பட்டியந்தல் கிராமத்தில் இறப்பிலும் தம்பதியினர் இணைபிரியாதது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-16 08:35 GMT
திருவண்ணாமலை அருகே பட்டியந்தல் கிராமத்தில் இறப்பிலும் தம்பதியினர் இணைபிரியாதது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயி ஜெயராமனுக்கு வயது 96 இவரது மனைவி வீரகங்காவுக்கு வயது 87. மகன், மருமகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், பேத்தியை இவர்களே கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஜெயராமன் இறந்துள்ளார். இதனை கண்ட வீரகங்காவும், 2 மணி நேரத்தில் இறந்துள்ளார். எப்போதும் ஒன்றாக இருக்கும் இந்த தம்பதியினர், இறப்பிலும் இணைபிரியாமல் இருப்பதாக கூறி, பொதுமக்கள் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்