சூடான தண்ணீரில் இறங்கிய 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு - பெற்றோரின் கவனக்குறைவே காரணம் என வேதனை

வேலூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Update: 2020-02-15 03:10 GMT
பெண்ணாத்தூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்த லோகேஷ், புஷ்பலதா தம்பதிக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த செவ்வாய் கிழமை, குழந்தையை குளிப்பாட்டுவதற்காக, சுடு தண்ணீரை தொட்டி அருகே தாய் வைத்துள்ளார். அப்போது, அங்கு சென்ற குழந்தை, சுடு தண்ணீரில் இறங்கியுள்ளது. சூடு தாங்காமல் அலறிய குழந்தையை மீட்டு, அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். காயங்களுடன் 3 நாட்களாக போராடி வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்