"புரட்சிகரமான இடத்தை பிடித்து விட்டார் நாராயணசாமி" - திமுக தலைவர் ஸ்டாலின்

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை நாராயணசாமி பிடித்து விட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-13 08:00 GMT
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை நாராயணசாமி பிடித்து விட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், புதுவை மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துள்ளார். இந்த தீர்மானங்களை முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றத்தில்  நிறைவேற்றியதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலை  கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்