"காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" - முதல்வர் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.

Update: 2020-02-09 12:17 GMT
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும், இது குறித்து தாம் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்