சேலம் : பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - ஒருவர் கைது

சேலம் அருகே சிக்கிய பஞ்சலோக அம்மன் சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-08 05:07 GMT
சேலம் கெங்கவல்லியை சேர்ந்த ராஜசேகர். ரியல் எஸ்டேட் தரகரான இவர் தம்மிடம் 5 கோடி மதிப்பிலான பஞ்சலோக அமம்ன் சிலை விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார்,  சிலை வாங்குவது போல் ராஜசேகரை கைது செய்தனர் மேலும் சிலையையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் பேசி சிலையை பத்திரமாக போலீசார் மீட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், ஒன்றேகால் அடி உயரமும், ஆறரை கிலோ எடைக்கொண்ட பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்