கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை பெசன்ட் நகரில் நடந்த கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.

Update: 2019-12-30 10:53 GMT
சென்னை பெசன்ட் நகரில் நடந்த கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை  சந்தித்தனர். அண்ணா அறிவாலயத்தில்  நிகழ்ந்த இந்தச் சந்திப்பின் போது திமுக எம்.பி. கனிமொழி உடனிருந்தார். அப்போது கைதுக்கு கண்டனம் தெரிவித்ததற்கு  ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் வருகிற 3ஆம் தேதி எழும்பூரில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்ளுமாறும் கனிமொழிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து காயத்ரி என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தற்போது  நடந்து கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்