திருவொற்றியூரில் 36 சவரன் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி கைது

சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் மணிவண்ணன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சரவன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2019-12-23 08:17 GMT
சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் மணிவண்ணன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சரவன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனையிட்டனர். பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் அடிக்கடி  அந்த தெருவில் வந்து போவது தெரியவந்தது. இதனிடையே, இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து, விபி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்