கனமழையால் மண் சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள் : மாற்று இடம் வழங்க ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையால், மேட்டுப்பாளையம் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆலயம் ஒன்று புதைந்தது. மேலும், இந்த இடத்தில், மண்சரிவு காரணமாக, சில வீடுகள் அந்தரத்தில் இருந்தன.

Update: 2019-12-12 22:27 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையால், மேட்டுப்பாளையம் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆலயம் ஒன்று புதைந்தது. மேலும், இந்த இடத்தில், மண்சரிவு காரணமாக, சில வீடுகள் அந்தரத்தில் இருந்தன. வீடுகள் இடியும் நிலையில் இருப்பதாகவும் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, 7 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியா் இன்னசெனட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்