காவிரி நீர்ப்பாசனங்களை புனரமைக்க ரூ.700 கோடி
காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
காவிரி படுகையில் உள்ள நீர்ப் பாசனங்களை புதுப்பிக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஆணையில், காவிரி பாசன படுகையில் உள்ள ராஜ வாய்க்கால் நீர்ப் பாசனம், நொய்யலாறு நீர்ப்பாசனம், கட்டளை வாய்க்கால் நீர்ப்பாசனம் ஆகிய மூன்றை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவிரி நீர்பாசன வழித்தடங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.