ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவர்கள் சாதனை - பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த ஆட்சியர்

சிவகங்கையில் உலக சாதனைகளை முறியடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Update: 2019-11-26 21:59 GMT
சிவகங்கையில் உலக சாதனைகளை முறியடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 11 வயது சிறுவன் பிரணவ் குமார் ஜம்பிங்ஜேப்ஸ் எனப்படும் குதிக்கும் போட்டியில், ஒரு நிமிடத்தில் 116 முறை குதித்து சாதனை படைத்துள்ளார்.   5 வயது சிறுவன் பிரணித் குமார், சக்கராசனம் என்ற ஆசனத்தை 35 நிமிடம் 45 வினாடிகள் செய்து சாதனை படைத்துள்ளார். இதேபோல, 8 வயது சிறுவன் ராகவ் ஐயனாரும் சக்கராசனத்தை 31 நிமிடங்கள்  செய்து காண்பித்து அசத்தியுள்ளார். இந்த சாதனைகள் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இந்த சாதனை சிறுவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்