ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது பரபரப்பு, பிரேக் பிடிக்காததால் வேகமாக சென்ற லாரி
ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது பரபரப்பு, பிரேக் பிடிக்காததால் வேகமாக சென்ற லாரி
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் நகராட்சி துறையினர் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற வந்த லாரியின் பிரேக் பிடிக்காததால், சாலையின் சரிவில் அதிவேகமாக சென்றது. இதனால் அங்கிருந்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அலறி அடித்துக்கொண்டு ஒதுங்கினர். அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் கருங்கற்கலை லாரியின் டயர் பகுதியில் முட்டு கொடுத்து நிறுத்தியதால் உயிர் சேதம் தவிற்கப்பட்டது.