சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-17 12:52 GMT
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நெசப்பாக்கம் மதுபானக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  நெசப்பக்கம் பகுதியை சேர்ந்த கௌதம் மற்றும் அசோக் நகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடபழனி காவாங்கரை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, நாகம்மாள், லட்சுமி மற்றும் வசந்த குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் படி, திருவொற்றியூரை சேர்ந்த கோதண்டம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்