நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - போக்குவரத்து நிறுத்தம்

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2019-11-17 11:51 GMT
நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  கன மழை பெய்து வந்தது. இந்நிலையில், கனமழை காரணமாக, நெல்லை மாநகரின் பிரதான சாலைகளில்  தண்ணீர் சூழ்ந்தது.  பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் ஒரு அடி  அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனிடையே பலத்த மழை காரணமாக ஊருடையான் குடியிருப்பில் இரு வீடுகள் சேதம் அடைந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்