13 மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு தடை கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

13 மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Update: 2019-11-11 11:34 GMT
13 மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, இன்று,நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி தனது பொதுநல வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். அப்போது மனுவை வாபஸ் பெற முடியாது என்று கூறிய நீதிபதிகள், வேண்டும்  என்றால் மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறினர். இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து  விசாரிக்கும் என கூறிய அவர்கள், வழக்கை ஏற்கனவே விசாரித்த முந்தைய நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட பதிவளருக்கு  உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்