பள்ளி பேருந்தும் பயணிகள் பேருந்தும் உரசி விபத்து : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் தனியார் பள்ளி பேருந்தும், தனியார் பயணிகள் பேருந்தும் குறுகிய சாலையில் சென்ற போது ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து ஏற்பட்டது.

Update: 2019-11-08 13:52 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் தனியார் பள்ளி பேருந்தும் தனியார் பயணிகள் பேருந்தும் குறுகிய சாலையில் சென்ற போது ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் பள்ளி பேருந்து அருகே இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்து பள்ளத்தில் சரியாத‌தால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்