கடந்த சில நாட்களாக பெய்த கனமழை : சின்ன வெங்காயம் பயிரிடும் பணி தீவிரம்
சின்ன வெங்காயம் பயிரிடும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், கடந்த சில நாட்களாக பெய்துவந்த கனமழையால் வெங்காயம் பயிரிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழையால் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியது. இதனை உரிய முறையில் பயன்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் உடனடியாக நிலத்தை உழுது, அதில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டனர்.