கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-31 03:36 GMT
மஹா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.  இதனால், தூத்துக்குடி, குமரி, புதுச்சேரி, கொடைக்கானல் தாலுக்காவில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்