"அடிப்படை வசதிகள் இல்லை" - ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், போதிய அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-10-25 10:25 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், போதிய அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு குவளை குடிநீரை மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பகிர்ந்து குடிகின்றனர். தங்களின் நலன், கல்வி கருதி, விடுதியில்  போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்