நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை : நவ. 18-ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் இன்று ஆஜராகவில்லை.

Update: 2019-10-23 13:48 GMT
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் இன்று ஆஜராகவில்லை. உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 18 ஆம் தேதி மூவரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு,  வழக்கை ஒத்திவைத்தார். அன்று முதல் சாட்சிகளிடமும் விசாரணை தொடங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்