கோவையில் ஒரு மணி நேரம் மழை -பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
கோவையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக , கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், டவுன்ஹால், இராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உட்பட புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மழை காரணமாக பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.