"உலக அரங்கில் தமிழகத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 19:14 GMT
இந்தியா- சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு  முதலமைச்சர்  பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை  தமிழகத்தில் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்றும்,  பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பின் மூலம் உலக நாடுகளின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது என்றும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும் தமிழகத்தின் மதிப்பையும் உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி என்றும் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் இரு நாட்டு தலைவர்களையும் மகிழ்வித்த கலைஞர்களுக்கும், பிரதமர் மற்றும் சீன அதிபருக்கு வரவேற்பு அளித்த மாணவர்களுக்கும்  மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த அமைச்சர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்