தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி : 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-10-05 13:35 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மொத்தம் 3000 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் 11 கோடியே 52 லட்சம் நிதியுதவி என மொத்தம் ரூ.21 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்