ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள்

ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் .பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினர்

Update: 2019-10-05 08:53 GMT
நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகே பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  1993 கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவித்தனர். விழாவில் ஆசிரியர்களுக்கு சந்தனமாலை அணிவித்து ,  அழைத்து வந்து முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் பரிசுகளை கண்ணீர் மல்க பெற்று கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. மேலும் பள்ளிக்கு தேவையான சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள  கல்வி உபகரணங்களையும் அவர்கள் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்