நாங்குநேரி இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் குறை

நாங்குநேரி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் எந்த விதமான மொபைல் சேவைகளும் கிடைக்க வில்லை என்று கூறி அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்

Update: 2019-10-05 02:03 GMT
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற  21ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரிக்கான அலுவலகம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அலுவலகத்தில் தொலைத் தொடர்பு வசதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முடியவில்லை என்று கூறி,   மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அரசியல் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்