தரைதட்டிய கடலோர காவல்படை கப்பல் : 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

மண்டபம் அருகே தரைதட்டிய கடலோர காவல்படை கப்பல் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.

Update: 2019-08-30 23:15 GMT
மண்டபம் அருகே தரைதட்டிய கடலோர காவல்படை கப்பல் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. இன்று கடலில் நீர் குறைந்து இருந்ததால் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு மண்டபம் முகாமிற்கு திரும்பிய இந்திய கடலோர காவல்படையின் கப்பல், மண்டபம் முகாம் அருகே கால்வாய் வழியாக வந்தபோது தரைதட்டி  நின்றது. இதனையடுத்து மீன்பிடிப் படகுகள் இரண்டைக் கொண்டு கயிறு கட்டி , மீனவர்கள் உதவியுடன் கப்பல் மீட்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்