இந்து மதம் தழைத்தோங்க தமிழ் மொழியே காரணம் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்க மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல்வெளியீடு மற்றும் நல்லாசிரியர் நன் மாணாக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது

Update: 2019-08-30 21:06 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்க மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல்வெளியீடு மற்றும் நல்லாசிரியர் நன் மாணாக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அறிவியல் வளர்ச்சி இயக்க நிறுவனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்கே பாரதிமோகன், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், இந்து மதம் தலைத்தோங்க காரணம் தமிழ் மொழி என்றார். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு மதத்தையே மீட்டெடுத்த ஒரு மொழி எனவும், அதனால்தான் இங்கு  ஆதீன மடங்கள் உருவானதாகவும் அமைச்சர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்