அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியபோக்கு... இணையதளங்களில் பரவும் வீடியோ

அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டும், புகை பிடித்துக் கொண்டும் பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Update: 2019-08-30 02:21 GMT
அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டும், புகை பிடித்துக் கொண்டும் பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடலூரில் இருந்து  திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற பழனிவேல் என்ற ஓட்டுநர், தொடர்ந்து செல்போன் பேசியபடியும், புகைப்பிடித்த‌படியும் பேருந்தை இயக்கியுள்ளார். இதனை கண்ட பயணிகள் அவரை கண்டித்தபோது, உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுநரின் அலட்சியப்போக்கை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்