அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம், இரவு முதல் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம், இரவு முதல் வாபஸ் பெறப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை - தலைமை செயலகத்தில் பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல், அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. 4 நாள் நீடித்த அரசு டாக்டர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட தகவலை, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.